Jan 1, 2011

விழி மொழி


மொட்டாக இருந்த என்னை
மலர வைத்ததும் நீ தான்
மலர்ந்த என்னை வாசனையோடு
வாட வைத்ததும் நீ தான்
எட்டியே நின்று பார்க்க முடிந்த உன்னை
கட்டி தழுவ கைகள் ஏங்குகிறது - உன்னை கண்டால்
கைகள் உன்னை தழுவ முதல்- என்
கண்ணீர் உன் காலடி தழுவும் - உன்னை
பிரிந்து நான் பட்ட வேதனையை
அவை உனக்கு சொல்லுமடா

ஸ்பரிஷம்


உன்னை பார்த்ததும் பாதி விழி மூடியது
உன் மூச்சு பட்டதும் முழு விழியும்
இமைக்குள் ஓடி ஒளிந்து கொண்டது
மலைக்க வைத்தது உன் ஆண்மையின் மென்மை
மூடிய விழிக்குள் மலர்ந்தது என் மெல்லிய பெண்மை

ஆவல்


காதலா,
கலங்கி நிற்கும் கண்களும்
தவித்து துடிக்கும் மனசும்
என் தனிமையின் வேதனையும்
ஏன் உனக்கு மட்டும் புரியவில்லை? - இல்லை
புரிந்தும் புரியாதது போல இருக்கிறாயா?

காதலுடன் காத்திருந்த காலம் போய்
கண்ணீருடன் காத்திருக்கிறேன் உன் வருகைக்காக
கண்ணீர் துடைத்து உன்னோடு அணைக்க வருவாயா? - இல்லை
என் கல்லறையில் பூக்கள் தூவ வருவாயா?
உன் கையால் எது செய்தாலும்
என் நெஞ்சம் ஏற்றுகொள்ளுமடா சந்தோசமாக