Jan 6, 2011

எதிர்பார்ப்பு


எழுதினேன் கவிதைகள் எராளமாக- பார்த்து
மனம் திறந்து பாராட்டினாய் தாராளமாக
எழுத்தில் வடித்தேன் என் இதயத்தை - அதை
நீ பார்க்க கொண்டேன் மயக்கத்தை - என்
நெஞ்சில் நிறைத்தாய் ஏக்கத்தை - உன்
காதலை சொல்ல காட்டினாய் தயக்கத்தை
மெதுவாக இழந்தேன் என் உடல் இயக்கத்தை
இப்போழுது எதிர் பார்க்கிறேன் என் மரணத்தை!

ஏன்?


உன்னை நெருங்கி வந்த போது
என்னை விட்டு விலகி சென்றாய்
உன்னை விட்டு விலகி செல்லும் போது
என்னை நெருங்கி வருகிறாயேடா
நான் நினைத்த எதுவுமே
நினைத்த போது நடக்காதாடா?