Jan 1, 2011

விழி மொழி


மொட்டாக இருந்த என்னை
மலர வைத்ததும் நீ தான்
மலர்ந்த என்னை வாசனையோடு
வாட வைத்ததும் நீ தான்
எட்டியே நின்று பார்க்க முடிந்த உன்னை
கட்டி தழுவ கைகள் ஏங்குகிறது - உன்னை கண்டால்
கைகள் உன்னை தழுவ முதல்- என்
கண்ணீர் உன் காலடி தழுவும் - உன்னை
பிரிந்து நான் பட்ட வேதனையை
அவை உனக்கு சொல்லுமடா

3 comments:

Post a Comment