Jan 3, 2011

தேடலின் விடை


என் கண்ணில் உன்னைத் தேடும் போது என் அருகில் நீ இல்லை
என் அருகில் நீ நிற்கும் போது என் இதயம் என்னிடம் இல்லை
எங்கே என் இதயம் என்று தேடும் போது
உன்னிடம் இருப்பதை தெரிந்தேன்
என் கண்கள் மீண்டும் உன்னை நாடிய போது
என்னுள் ஒரு புதிய உணர்வை உணர்தேன்
உன் மார்பில் முகம் புதைத்தேன்
என் வெட்கத்தை எங்கோ தொலைத்தேன்
உன் அணைப்பில் இருந்த அந்த கணம்
உணர்ந்து கொண்டேன் எம் காதலின் மணம்
தொலைந்த என் இதயம் வாழ்க்கையாய் கிடைத்ததே
இந்த ஜென்மத்தின் பலனை என் ஜீவன் அடைந்ததே

1 comment:

Unknown said...

அருமை அருமை..

Post a Comment