Jan 3, 2011

சினேகிதியே....


கனவிலோடும் கடவுளை
கண்டிட வேண்டும்- நாம்
பிரியாவரமொன்றை
வாங்கிட வேண்டும்!

விழியோரம் வழிகின்ற
நீராக வேண்டும் - உன்
மடி மீது தானே- என்
மரணம் வேண்டும்!

யாரோடு வாழ்ந்தாலும் - நீ
நலம் வாழ வேண்டும்
என் நினைவாக ஜென்மங்கள்
எல்லாம் நீயே வேண்டும்!

இவ் ஜென்மம் நம் உறவு
பிரிந்திட நேர்ந்தாலும் - மறு
ஜென்மம் உன் மகனாய்
பிறந்திட வேண்டும்!

தாயாய் நீ என்னை
தாலாட்ட வேண்டும்
சேயாய் உன்மடியில் - நான்
தூங்கிட வேண்டும்!

செல்ல குறும்புகள் -நான்
செய்ய வேண்டும்
சிரித்தபடி நீ என்னை
அணைத்திட வேண்டும்!

தவறுகள் நான் செய்தால்
நீ தண்டிக்க வேண்டும்- நீ
தண்டித்து நான் அழுதால்
அன்பாய் தலை கோத வேண்டும்!

தாய் உறவாக ஜென்மங்கள் - நீ
வாழ வேண்டும் - சேய்
உறவாக உன் மடியில்
உயிர் போக வேண்டும்!

வயதாகி விட்டால் இரு கை சுமந்து
குளிப்பாட்ட வேண்டும் - உனை
துவட்டி கூறை கட்டி
அழகு பார்க்க வேண்டும்!

கவிஞர்கள் நம் அன்பை
கவிபாட வேண்டும்
காலங்கள் நம் உறவை
கதையாக்க வேண்டும்!

இது என்ன உறவென்று
நான் கேட்க வேண்டும் - போன
ஜென்மத்து உறவென்று
நீ சொல்ல வேண்டும்!

2 comments:

Post a Comment